மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்க்கு செப்டம்பர் / அக்டோபரில் நேரடி தேர்வு – ஜூலை 22 க்குள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் திருப்தி இல்லாத மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடக்கும் நேரடி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
நேரடி தேர்வு:
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தாலும், கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாகவும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மாற்று மதிப்பெண் முறையில் மதிப்பெண் வழங்குவதற்கு அரசு முடிவு செய்து அதற்கான வரைமுறையையும் வெளியிட்டது. அதன்படி, ஜூலை 19ம் தேதியான இன்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட போவதாக அரசு கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு சென்னை டிபிஐ அலுவலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
தமிழகத்தில் +2 பொது தேர்வில் 1,656 மாணவர்கள் தேர்ச்சி பெற வில்லை – அமைச்சர் அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதன்முறையாக முடிவுகள் தசம எண்ணில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை அரசின் இணையதளத்தில் உள்ளிட்டால் மதிப்பெண் பட்டியல் கிடைக்கும் வகையில் உள்ளது. +2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். அரசு வெளியிட்டுள்ள மதிப்பெண்களின் திருப்தி இல்லாத மாணவர்கள் கொரோனா பரவல் நிரையை பொறுத்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ளலாம். இதற்கு ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
12ம் வகுப்பு பொதுப்பாடப்பிரிவில், 7,64,593 மாணவர்களும், தொழில் பாடப்பிரிவில் 51,880 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 35 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.