தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறப்பு? மேலாண் இயக்குநர் விளக்கம்!
தமிழகத்தில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அளித்துள்ளது அரசு. இதனால் டாஸ்மாக் மதுபான கடைகள் நாளை திறக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தமிழக முதல்வர் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். மேலும் நோய் பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாமல் நோய் வேகமாக பரவி வரும் நேரத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் சாலைகளிலும், வீதிகளிலும் கூட்டமாக சுற்றி திரிந்தனர்.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் – உரிமையாளர்கள் அறிவிப்பு!!
அதனால் தமிழக முதல்வர் 14 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். மே 10 முதல் 24ம் தேதி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்தார். இதனால் அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் இயங்க அனுமதி இல்லை. தற்போது 14 நாட்கள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் 7 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வாரத்திற்கு காய்கறி, மளிகை போன்ற எந்த கடைகளும் செயல்பட அனுமதியின்றி முழு முடக்கம் கடைபிடிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மதுபான கடைகள் இன்றும், நாளையும் திறக்கப்படாது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார். மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூடுவார்கள். இதனால் தொற்று வாய்ப்பு அதிகரிக்கும் எனவும், கொரோனா பரவலை தடுக்க மதுக்கடைகள் நாளை திறக்கப்படாது என கூறியுள்ளார்.