தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இயங்கும் – உரிமையாளர்கள் அறிவிப்பு!!
தமிழகத்தில் வரும் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்றும், நாளையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு அனுமதி:
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பினால் அதிக இழப்புகளை நாம் சந்தித்து வருகிறோம். நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாவும் முழு தீவிரமாக அமலில் இருந்த போதிலும் தொற்று பாதிப்பு தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த மே 10ம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 24ம் தேதி முடிய உள்ளது.
CBSE 12ம் வகுப்பு & நுழைவுத்தேர்வுகள் – நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம்!!
இந்நிலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முறையாக கடைபிடிக்காத காரணத்தால் தான் தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு நீடிப்பது குறித்து மருத்துவ நிபுணர் குழு மற்றும் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரும் மே 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் மே 22 மற்றும் 23ம் தேதியான இன்றும், நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அரசு அனுமதியளித்துள்ளது. எனவே அரசு சார்பில் 4500 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் இயங்க உள்ளது. வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளுக்காக இன்றும், நாளையும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.