டாஸ்மாக் கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே திறப்பு – அதிகாரிகள் உத்தரவு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது சேலம் ஆட்சியர் மதுபான கடைகளை மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடுகள் :
முதல் மற்றும் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவத்தால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்தது. நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. அதனை குறைப்பதற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் – முக்கிய உத்தரவு!
அதை கட்டுக்குள் கொண்டு வர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலா தளங்கள் மற்றும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. திருப்பூர், கோவை, சேலம் ஆகிய பகுதிகளில் தற்போது நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே சேலம் மாவட்ட ஆட்சியர் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். நோய் தொற்று பரவலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியமானது.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று முதல் வணிக வளாகங்கள், மால்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் அவை செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வஉசி மார்க்கெட், சின்னக்கடை வீதியில் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6 மணி வரை இயங்கலாம் எனவும் ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இதே போல் சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.