தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கம் – முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில், மே 10ம் தேதி முதல் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பரவல் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது. பொதுப்போக்குவரத்துக்களான பேருந்து, ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர கட்டுப்பாட்டின் விளைவால் தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது.
10, 12ம் வகுப்பு தேர்வு கட்டணத்தை திருப்பி தர உத்தரவிட முடியாது – நீதிமன்றம் அதிரடி!
இதனால் படிப்படியாக தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து வந்தது. இருப்பினும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டது. தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிக அளவிலேயே இருந்து வருகிறது. இதனால் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தமிழக அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. சில மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டம் அதிகம் இல்லாமல் பேருந்துகளை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும், பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.