சென்னையில் டாஸ்மாக் கடைகள் மூடல் – ‘இந்த’ இடங்களில் மட்டும்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனா மீண்டுக்கும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முக்கிய இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதால் கூட்டம் அலை மோதுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்து வருகிறது என்று மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர். நாள் ஒன்றுக்கு 35,000 ஆக இருந்த ஒரு நாள் பாதிப்புகள் தற்போது 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருகிறது இதனால் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனால் மக்கள் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர்.
கோயிலுக்கு சொந்தமான இடங்களில் வாடைக்கு வசிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு உத்தரவு!
ஆனாலும் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இது கொரோனா மூன்றாம் அலையாக இருக்க கூடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அத்திபாரிக தொடங்கியுள்ளது. மக்கள் நடமாடும் முக்கிய விதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகளை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தி.நகர் ரங்கநாதன் தெரு, ஜாம்பஜார் மார்க்கெட், புரசைவாக்கம் கடை வீதி, கொத்தவால் சாவடி மார்க்கெட், என்.எஸ்.சி.போஸ் ரோடு, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது மிண்ட் தெரு, திருவல்லிக்கேணி பாரதி சாலை, அமைந்தகரை, செனாய் நகர் போன்ற பகுதிகளில் 4 டாஸ்மாக் கடைகளும் மேற்கு தாம்பரத்தில் 3 கடைகளும் மக்கள் அதிக மக்கள் கூடும் பகுதிகளில் உள்ள 7 மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மது பிரியர்களும் அருகில் உள்ள கடைகளுக்கு செல்வதால் கூட்டம் அலை மோதுகிறது.