தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதுபான விற்பனைக்கு தடை – மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருப்பதால் மாநில தேர்தல் ஆணையம் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது.
மது விற்பனைக்கு தடை:
தமிழகத்தில் அரசின் நிர்வாக காரணங்களுக்காக பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 9 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு வார்டுகள் வரையறை செய்யப்படவில்லை. அதனால் 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தற்போது வார்டுகள் வரையறை செய்யப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. 06.10.2021 மற்றும் 09.10.2021 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
EPFO Balance செக் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!
அதனை தொடர்ந்து 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனால் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 04.10.2021 காலை 10 மணி முதல் 06.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும், இரண்டாம் கட்ட வாக்குபதிவு மற்றும் தற்செயல் தேர்தல்கள் நடைபெறும் பகுதிகளில் 07.10,2021 காலை 10 மணி முதல் 09.10.2021 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும் மது விற்பனை நடைபெற கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மதுக்கூடம் மற்றும் மதுபான கடைகள் மூடியிருக்க வேண்டும்.
இனி அரிவாள் வாங்கவும் ‘ஆதார் கார்டு’ அவசியம் – காவல்துறை அதிரடி அறிவிப்பு!
மேலும் பீர், ஓயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறந்திருந்தாலோ அல்லது அதனை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு எடுத்து செல்லவும் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி மது விற்பனை செய்தால் தடையை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது