இனி அரிவாள் வாங்கவும் ‘ஆதார் கார்டு’ அவசியம் – காவல்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் குற்றங்களை தடுப்பதற்கு டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் உத்தரவின் அடிப்படையில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ரவுடிகளிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக காவல்துறை:
தமிழகத்தின் புதிய டிஜிபி ஆக சைலேந்திர பாபு அவர்கள் கடந்த ஜூலை 1ம் தேதி பதவி ஏற்றார். இவர் இளைஞர்களுக்கு ஒரு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் விளங்குகிறார். அதனை தொடர்ந்து சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின்படி தமிழகத்தில் குற்றங்களை குறைக்கும் விதமாக ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைதான நிலையில், அவர்களிடமிருந்து 1,110 கத்தி, அரிவாள்கள், 7 துப்பாக்கிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
TCS, Wipro, HDFC Bank, Deloitte நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH!
மேலும் டிஜிபி ஆக சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின்படி அனைத்து மாவட்டத்திலுள்ள எஸ்பி- க்களும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் ஆலோசனையில் சைலேந்திர பாபு அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வதை கண்டு மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவை போலவே ஸ்டாலினும் செயல்படுகிறார் என்று செல்லூர் ராஜு அவர்கள் கூறினார். இதனை தொடர்ந்து மதுரை மற்றும் நெல்லை மாவட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய சைலேந்திர பாபு அவர்கள் தென் மாவட்டங்களில் குற்றவாளிகள், ரவுடிகள் மேலும் சந்தேகத்திற்கிடமானோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக அவர் அறிவித்தார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – 11 குழுக்கள் ஆய்வு!
இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் வாங்க வருவோரிடம் ஆதார் எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் மதுரையில் ஒத்தக்கடை, நெல்பேட்டை, வில்லாபுரம் போன்ற பகுதிகளில் அதிகளவில் ஆயுதங்கள் விற்பனை செய்வதால் ஆதார் எண் வாங்காமல் கடை உறுப்பினர்கள் ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றங்கள் பெருமளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.