தமிழக பல்கலைக்கழகத்தில் 1 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Project Associate, SRF பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்தது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு தகுதியானவர்கள் இப்பதிவை பயன்படுத்தி எளிமையாக விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்தபின் பதிவுகளை மேற்கொள்ளவும்.
தமிழ்நாடு TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Project Associate, SRF ஆகிய பணிகளுக்கு என்று 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
- Incubation Manager / CEO பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech, B.Sc, B.V.Sc, M.Sc, MBA டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- Manager (Operations) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE, M.Sc, M.Com டிகிரி முடித்திருக்க வேண்டும்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
- Business Liaison Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech, M.Sc, MBA டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- Lab Assistant பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE / B.Tech, B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பதவியை பொறுத்து பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்ட உள்ளார்கள்.
TANUVAS விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து கொடுத்துள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் 25.03.2022 ம் தேதி இறுதி நாளாகவும் அறிவித்துள்ளதால், இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே பதிவுகளை செய்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்கிறோம்.