தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்திற்கு இன்று விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

0
தமிழகத்தில் 'இந்த' மாவட்டத்திற்கு இன்று விடுமுறை - மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்கு திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

விடுமுறை அறிவிப்பு:

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உலகின் மிகவும் பிரபலமான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் விமர்சையாக நடத்தப்படும். நடப்பு ஆண்டு திருவிழா ஏப்ரல் ஆறாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாமிக்கான  பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருத் தேரோட்டம் ஏப்ரல் 20-ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் செய்தி குறிப்பாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!