தமிழ்நாடு மின் வாரியத்தில் 5000 கேங்மேன் காலிப்பணியிடங்கள் – நீதிமன்றம் அனுமதி!!

0
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5000 கேங்மேன் காலிப்பணியிடங்கள் - நீதிமன்றம் அனுமதி!!
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5000 கேங்மேன் காலிப்பணியிடங்கள் - நீதிமன்றம் அனுமதி!!
தமிழ்நாடு மின் வாரியத்தில் 5000 கேங்மேன் காலிப்பணியிடங்கள் – நீதிமன்றம் அனுமதி!!

தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 5000 கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அரசின் அறிவிப்பினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மின்வாரிய பணியிடங்கள்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்கள், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பப்படுகிறது. மின்வாரியத்தில் களப்பணி செய்ய ஆட்கள் இல்லாத காரணத்தாலும், பேரிடர் காலங்களில் களப்பணி செய்யவும் கடந்த 2019ம் ஆண்டு கேங்மேன் பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட அறிக்கையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள் ரத்து – ஆசிரியர் கூட்டத்தில் தீர்மானம்!!

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், புதிதாக கேங்மேன்கள் நியமிக்கப்பட்டாலும் ஒப்பந்த ஊழியர்களின் பணி தொடரும் எனவும், இப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் 70% முடிவடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!