தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் காய்கறி விலை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்
காய்கறி விலை
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி இருக்கும் நிலையில் பல இடங்களில் வெயில் சுட்டரித்து வருகிறது. அதனால் காய்கறி விளைச்சல் சற்று குறைந்துள்ளது. எனவே காய்கறி விலை ஆனது சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.30, பீன்ஸ் ரூ.60 , பீட்ரூட் ரூ.20, கத்திரிக்காய் ரூ 20, முட்டைக்கோஸ் ரூ 10, கேரட் ரூ. 40, காலிபிளவர் ரூ 10 விற்பனை செய்யப்படுகிறது
அதேபோல சவ் சவ், ரூ 20 தேங்காய் ரூ15, வெள்ளைப் பூண்டு ரூ, 240, பச்சை மிளகாய் ரூ30, வெண்டைக்காய் ரு 30, மாங்காய் ரூ 25, பெரிய வெங்காயம் ரூ.15, சின்ன வெங்காயம் ரூ.25 , உருளைக்கிழங்கு ரூ.60, தக்காளி ரூ.18, சேனைக்கிழங்கு ரூ.45, சேப்பங்கிழங்கு ரூ.29க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து கோடைகாலம் வெயில் அதிகரித்து வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காய்கறி விலையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.