தமிழகத்தில் காய்கறி, மளிகை பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்பனை – ஆணையர் எச்சரிக்கை!
தமிழகத்தில் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருட்கள் விற்பனை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலம் முழுவதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தார். அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் நோய் பரவல் குறையாததால் மேலும் தளர்வில்லா ஊரடங்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை பொருட்கள் விற்கப்படும் கடைகள் திறக்க அரசு தடை விதித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய், கனிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்திற்கு 4.2 லட்ச தடுப்பூசிகள் இன்று மாலை வழங்கல் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வியாபாரிகள் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், பிரெட் போன்றவைகள் விற்கப்பட்டு வருகிறது. மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருக்கும் நிலையில், அவர்களில் 3,600 பேருக்கு மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் இதுவரை அனுமதி அளித்துள்ளது. வீடுகளுக்கே சென்று விற்பதால் பொருட்களின் விலையை வியாபாரிகள் அதிகமாக வைத்து விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தது.
TN Job “FB Group” Join Now
எனவே காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதாக பொதுமக்கள் புகார் அளித்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை ஆணையர் ககன்தீப்சிங் பேடி எச்சரித்துள்ளார். மேலும் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கவும் கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் அரசு ஜூன் 7 ம் தேதி வரை நடமாடும் வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.