தமிழகத்திற்கு 4.2 லட்ச தடுப்பூசிகள் இன்று மாலை வழங்கல் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
தமிழகத்தில் தற்போது தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு மேலும் 4.2 லட்ச தடுப்பூசிகள் வந்தடையும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமெடுத்து வரும் காரணத்தினால் தடுப்பூசி வழங்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் 30 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் – இன்று இந்தியா வருகை!
மேலும் தடுப்பூசி பணிகள் விரைவில் முடிவடைவதற்காக பொதுமுடக்கத்தில் இருந்து அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை தடுப்பூசி குறித்த தகவல் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு 4.2 லட்ச தடுப்பூசிகள் இன்று வந்தடையும் என்று தெரிவித்தது. இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு 4,20,570 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தடுப்பூசி அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.