தமிழகத்தில் இந்து அறநிலைத்துறை சார்பில் கோவில் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்காக 226 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
புதிய பணியிடங்கள்
தமிழகத்தில் இந்து கோவில்களின் நிர்வாகத்தை முறையாக பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் பல ஆண்டுகளுக்கு முன் இந்து அறநிலைத்துறை வாரியம் உருவாக்கப்பட்டது. தற்போது இந்து அறநிலைத்துறையின் கீழ் பல கோவில்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறையில் கோவில் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் குறைவான ஆட்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அதனால் அந்த பிரிவுகளில் புதிய பணியிடங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்து சமய அறநிலைத்துறையில் கோவில் சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்காக 226 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் பொறியியல் சேவைக்கான சிறப்பு விதிகளை உருவாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தமிழகத்தில் ஜன.27ல் மின்தடை பகுதிகள் – மின்வாரிய தகவல்!