தமிழக அரசு பணிகளில் 100% தமிழர்களுக்கே – ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு பணியில் 100% தமிழர்களை மட்டும் பணியில் அமர்த்த வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
அரசு பணியில் தமிழர்கள்:
தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆசிரியர் கூட்டம் காளையார் கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிளை தலைவர் ஆரோக்கிய பாஸ்கர் தலைமை தாங்கினார். கிளை செயலர் அலெக்ஸாண்டர் வரவேற்பு உரை வழங்கினார். மேலும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை நீக்கி விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல அரசு பள்ளி மாணவர்களின் கனவான மருத்துவ படிப்புகளை அவர்கள் பெறுவதற்கு, நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய தேசிய கொள்கையில், தமிழ் மொழிக்கு எதிராக உள்ளதை நீக்க வேண்டும்.
பொது சேவை ஆணைய தேர்வுகள் (HPPSC) ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகளை நடத்தி, 100% தமிழர்களை அரசு பணியில் அமர்த்த வேண்டும். தமிழர்களின் கலாச்சார சிறப்பாக விளங்கும் கீழடி, காளையார் கோவில், இலந்தக்கரை ஆகிய இடங்களில் தொல்லியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழகம் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக காணப்பட வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.