ஞாயிறு ஊரடங்கில் திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாளில் நிகழ்ச்சிகளுக்கு செல்வோர் அழைப்பிதழ்களை காண்பித்து செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஞாயிறு ஊரடங்கு அமல்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அந்த நாட்களில் மக்கள் தேவையின்றி வெளியே வர கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அன்றைய தினம் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாகனங்களில் வருவோர் அழைப்பிதழ்களை காண்பித்து செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் அதிகம் கூடும் பூங்காக்கள், பொழுது போக்கு இடங்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
அதிகம் பரவும் கொரோனா தாக்கம் காரணமாக கட்டுப்பாடு விதிகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும், அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.