தமிழகத்தில் கடைகளுக்கு 6 மாத கால வாடகை தள்ளுபடி? வணிகர் சங்கம் கோரிக்கை!
தமிழகத்தில் தொடரப்படும் ஊரடங்கு காரணமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் இந்த நஷ்டத்தில் இருந்து மீள 6 மாத கால வாடகையை தள்ளுபடி செய்யும்படி வணிகர் சங்க பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
வணிகர்கள் சங்கம் கோரிக்கை:
தமிழகத்தில் இந்த கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாநில அரசால் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் கடைகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடும் நிலை ஏற்பட்டது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது சிறிய கடைகள் தான்.
ஜூன் 7 முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
அத்தியாவசிய தேவைகளை தவிர அனைத்து கடைகளும் மூடும் சூழல் ஏற்பட்டது. மேலும் வரும் திங்கள் முதல் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு மட்டும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கில் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டு வரும் சூழ்நிலையால் கடை உரிமையாளர்கள் பெருதும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வணிக சங்க பேரமைப்பு தமிக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதாவது வரும் திங்கள் முதல் அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து கடைகளும் திறக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் மீது பொய்யான வழக்குகளை தொடர்ந்தால் அந்த அதிகாரிகளை கண்டிப்பது மிகவும் அவசியம். மேலும் கடை வியாபாரிகள் சந்தித்து வரும் இந்த நஷ்டத்தை போக்க 6 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் முறையிடவுள்ளனர். இதனை வணிகர் சங்கத்தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.