தமிழகத்தில் ஜனவரி 19 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
தமிழகத்தில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதனை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
- தனியார் பள்ளி நிர்வாகங்கள் எழுத்துபூர்வ அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னர் பள்ளிகளை திறக்கலாம்.
- அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பணியாளர்களும் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்க அனுமதி உண்டு.
1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – பள்ளிக்கல்வித்துறை தகவல்!!
- மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும். மாணவர்கள் நேரடியாக வகுப்பறைக்கு வராமல், ஆன்லைன் வகுப்பை தொடர விரும்பினால் அதனை அனுமதிக்க வேண்டும்.
- பெற்றோரின் எழுத்துபூர்வ அனுமதி கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.
- பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்களை அவ்வாறே அனுமதிக்கலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக் கூடாது.
- அனைத்து மாணவர்களுக்கும் வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத் துறை சார்பில் வழங்கப்படும். இந்த அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்