தமிழகத்தில் ஏப்ரல் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி பள்ளிகளை திறந்து வைக்க வேண்டும் என மாவட்ட கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான செயல்முறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. வாக்குச்சாவடிகளாக மாற்றப்படும் பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்நிலையில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பிற்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது.
தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் – நிதித்துறைக்கு கோரிக்கை!!
இதனையடுத்து 12ம் வகுப்பு தவிர பிற அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்காக பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவினை கண்காணிக்க மையங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ள பள்ளிகளை வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி திறந்து வைக்க வேண்டும் என பழனி கல்வி மாவட்ட அலுவலர் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் திறந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No please 🥺 leve 10