தமிழக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் – நிதித்துறைக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதிய ஆணை வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டுக்கான ஊதிய ஆணை தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஊதிய ஆணை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஆசிரியர்களுக்கென தனி நிதி ஒதுக்கி அவர்களுக்கு மார்ச் மாத இறுதியில் ஊதிய ஆணை வழங்கப்படும். இந்த ஆணை மூலம் ஆசிரியர்களுக்கு ஊதியப்பட்டியல் தயாரித்து மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் அதிக பயன்பெற்று வந்தனர். தற்போது தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 3054 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலயில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று வேகமெடுத்து வருகிறது. இதனால் மீண்டும் பொதுமுடக்கம் ஏற்படும் நிலை வந்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் ஆசிரியர்களுக்கென வழங்கப்படும் ஊதிய ஆணையம் இந்த ஆண்டு வழங்கவில்லை. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் மார்ச் மாதம் ரூ.7,579 கோடி ஜிஎஸ்டி வசூல் – மத்திய அரசு அறிவிப்பு!!
இதனால் மாநிலம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியப் பட்டியல் தயாரித்து அனுப்புவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஊதிய ஆணையம் வழங்காததால் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வீட்டு கடன் உள்ளிட்டவற்றை செலுத்துவதற்கு தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் நிதித்துறை பட்ஜெட் ஒதுக்கி ஊதிய ஆணையத்தை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.