தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் சிக்கல் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் சிக்கல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் சிக்கல் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதில் சிக்கல் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து குழப்பம் நிலவி வரும் நிலையில், இது குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்தனர். கனமழை எச்சரிக்கையை பொறுத்து அந்தந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் குழப்பம் ஏற்பட்டது. அதனால் பள்ளிகளில் விடுமுறை விடுவது குறித்து தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை!

இந்நிலையில் நேற்று பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றி சென்னையை ஒட்டிய பகுதிகளும் வருகிறது. அதனால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த சிக்கலை சரி செய்ய மாற்று நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!