தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – கல்வித்துறை அறிவுறுத்தல்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்கு பின்னர் விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத்தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் உள்ள காரணத்தினால் செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாள் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் இல்லாத 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 23 ஆம் தேதி வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டது.
PF வாடிக்கையாளர்களுக்கு ஒரு அரிய திட்டம் – தவறாமல் படிங்க!!
இந்நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று நடைபெறும் கடைசி செய்முறை தேர்வுக்கு பின்னர் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்தாலும் ஆசிரியர்கள் அந்த மாதம் 30 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 2 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் அவர்களுக்கும் கோடை விடுமுறை வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்