தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் மனநிலைமையை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டன. மேலும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் சுமையை குறைக்க அரசு பாடத்திட்டத்தில் 30% குறைக்கப்படுவதாக அறிவித்திருந்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரே கேள்வி பொதுத்தேர்வு குறித்து இருந்தது. ஆனால் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் இன்று காலை தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மே மாதம் 3 ஆம் தேதி முதல் மே மாதம் 21 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
உலக நாடுகளின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் – ஆய்வு முடிவு வெளியீடு!!
இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், “இன்று காலை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி வெளியிடப்படும்”, என அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்