தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – அதிகரிக்கும் தேர்வு மையங்கள்! வெளியான தகவல்!
தமிழகத்தில் மாநில கல்வி வாரியம் சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்விற்கான தேதிகள் வெளியான நிலையில் இந்த ஆண்டு 200 கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தேர்வு மையங்கள்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் ஆண்டிற்கான 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த தேதிகளை சில மாதங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு தேர்வை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். மேலும் பள்ளிகளில் பொது தேர்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதை விட இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
3, 5, 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வா? புதிய கல்விக் கொள்கை திட்ட விவகாரம்!
மேலும் இது குறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், அனைத்து பள்ளிகளிலும் பொதுத் தேர்வுக்கு இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கும் பணி இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த பள்ளிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 11, 12 ஆம் வகுப்புகளுக்கு 3262 தேர்வு மையங்களும், 10 ஆம் வகுப்பிற்கு 4092 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் வசதிக்காக கூடுதலாக 200க்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.