சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டு இறுதித் தேர்வு, 10 நாட்களில் அட்டவணை வெளியீடு – அமைச்சர் அறிவிப்பு!!

0
சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டு இறுதித் தேர்வு, 10 நாட்களில் அட்டவணை வெளியீடு - அமைச்சர் அறிவிப்பு!!
சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டு இறுதித் தேர்வு, 10 நாட்களில் அட்டவணை வெளியீடு - அமைச்சர் அறிவிப்பு!!
சூழ்நிலைக்கு ஏற்ப ஆண்டு இறுதித் தேர்வு, 10 நாட்களில் அட்டவணை வெளியீடு – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தலாம் என்பது குறித்து கல்வியாளர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.

ஆண்டு இறுதித்தேர்வு:

கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் முதல் அசாம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட சில மாநிலங்கள் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்ல்லை. இன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து பேசி உள்ளார்.

முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

அவர் கூறுகையில், தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தலாம் என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கல்வியாளர்களுடன் ஆலோசித்து விரைந்து முடிவெடுப்பார். மேலும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் அது நடைபெறும் தேதியை பொறுத்தே 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தேதி அறிவிக்கப்படும்.

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு உறுதி – மாநில அரசு திட்டவட்டம்!!

பொது செய்முறை தேர்வுகள் குறித்து முதல்வருடன் ஆலோசித்து இன்னும் 10 நாட்களில் அட்டவணை வெளியிடப்படும். பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளதால் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வுகளில் குறைக்கப்பட்ட பாடங்களை கொண்டு வினாத்தாட்கள் தயாரிக்கப்பட உள்ளன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்குவதில் சிக்கல் நிலவுவதால், பென் டிரைவ் – ஸ்மார்ட் போர்டு மூலம் வகுப்புகளை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!