தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் 11 காலிப்பணியிடங்கள் – 5531 பேருக்கு நேர்காணல்!!
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு 5531 பேர் விண்ணப்பித்து நேர்முக தேர்வில் கலந்து கொண்டனர்.
ஊரக வளர்ச்சி துறை காலியிடங்கள்:
குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர், டிரைவர், இரவு காவலர் போன்ற பதவிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் 4 பேர், ஜீப் ஓட்டுனர்கள் 4, இரவு காவலர்கள் 3, என 11 காலியிடங்களுக்கு 5531 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த பணிகளுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டாச்சியர் அலுவலகம் என 5 மையங்களில் நடைபெற்றது. இதற்காக 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் 1000க்கு மேற்பட்டோர் காலையிலேயே நேர்காணலில் கலந்து கொள்ள திரண்டனர். அவர்களுக்கு காலை 600 பேர் மற்றும் மாலை 600 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது.
தமிழக அரசு உதவி பெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்கள் – பணி நிரந்தர கோரிக்கை!!
மேலும் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு அதிகபட்ச கல்வித் தகுதியாக 8 ஆம் வகுப்பு என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பதவிகளுக்கு பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த நேர்முக தேர்வு இன்றுடன் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
தமிழக ஊரக வளர்ச்சி அலுவலர் பணிக்கு விண்ணப்பம்