ராணிப்பேட்டையில் நவ 11, 25 தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களின் நலனிற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் 11 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி ராணிப்பேட்டையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் பலர் இருக்கின்றனர். தமிழகத்தை வேலைவாய்ப்பு இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை வழங்குகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் வருகிற நவம்பர் 11 மற்றும் 25 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மாதந்தோறும் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறு அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. பாடவாரியான அட்டவணை – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நவம்பர் 11 மற்றும் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியாக 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பிஇ படித்தவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைதேடுவோர் ராணிப்பேட்டை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்திற்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.