தமிழக அஞ்சலகங்களில் இனி படிவங்கள் தமிழில் இருக்கும் – எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம்!
தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் உள்ள அனைத்து படிவங்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருப்பதற்கு எம்.பி. சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இனி படிவங்கள் தமிழில் வழங்கப்படும் என்று தபால் துறை அறிவித்துள்ளது.
தமிழில் படிவங்கள்:
தமிழகத்தில் மொத்தம் 14 ஆயிரம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளது. இங்கு உள்ள அனைத்து பணிகளுக்கான படிவங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில்; மட்டுமே உள்ளது. இதனை மாற்றி தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்களில் தமிழில் படிவங்கள் இருக்கு வேண்டும் என்றும் இந்தி மொழி திணிப்பை தவிர்க்க வேண்டும் என்றும் எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் மத்திய அமைச்சர் மற்றும் தலைமை அஞ்சல் பொது மேலாளருக்கும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருந்தார்.
சென்னையில் நாளை ( அக்.7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், இந்திய ஆட்சி மொழி சட்டங்களின் படி மாநில மொழிகளுக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தார். இந்த கோரிக்கையின் நிமித்தமாக சென்னையில் தலைமை அஞ்சல் பொது மேலாளரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று நேரில் சந்தித்தார். சந்திப்பின் போது இனி தமிழகத்தில் உள்ள தபால்துறை அலுவலகங்களில் அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் என்றும் என்று தலைமை அஞ்சல் பொது மேலாளர் எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதனால் தமிழக அஞ்சல் அலுவலகங்களில் அடுத்த இரு வாரங்களில் மணி ஆர்டர் மற்றும் சேமிப்பு கணக்கு சார்ந்த படிவங்கள் தமிழில் இருக்கும்.
உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு – தேர்தல் ஆணையம்!
அதைத்தவிர மற்ற 40 வகையான படிவங்களும் விரைவில் அச்சடிக்கப்பட்டு அடுத்த ஒரு மாத காலத்திற்குள் அனைத்து அஞ்சல் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரி உறுதி அளித்துள்ளார். இதனால் இந்தி திணிப்பு முறியடிக்கப்பட்டுள்ளதாக எம்.பி. சு.வெங்கடேசன் பெருமிதம் அடைந்துள்ளார். மேலும், இந்த பிரச்சனையில் ஈடுபட்டு கோரிக்கையினை நிறைவேற்றிய மத்திய அமைச்சர் மற்றும் தலைமை அஞ்சல் அதிகாரிக்கும் தனது நன்றியினை எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.