சென்னையில் நாளை ( அக்.7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 7ம் தேதியான நாளை மாதந்திர மின் பராமரிப்பு பணிகள் செய்யப்பட்ட உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு மின்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மின் ஊழியர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு – தேர்தல் ஆணையம்!
அந்தவகையில், அக்டோபர் 7ம் தேதியான நாளை சென்னையின் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாகவும், பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
மதுரவாயில் பகுதி: ஆலப்பாக்கம் போரூர் கார்டன் பலராமன் தெரு, ராஜீவ் காந்தி நகர், பாரதிதாசன் நகர், கணபதி நகர், சக்தி நகர், பாலமுருகன் நகர், மெட்ரோ நகர் 1 மற்றும் 3 வரை தெரு, திருமூர்த்தி நகர், சக்தி சாய்ராம் நகர், ஜெயராம் நகர் வானகரம் செட்டியார் அகரம் மெயின் ரோடு, ராஜீவ் நகர் ஒரு பகுதி, லட்சுமி நகர், பி.எச் ரோடு ஒரு பகுதி, பாலாஜி நகர், பழனியப்பா நகர், வானகரம் சர்வீஸ் ரோடு, நீலங்கண்டமுதலி தெரு, வேம்புலி நாயக்கர் தெரு, டீச்சர்ஸ் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
-
அடையாறு பகுதி: காந்திமண்டபம் ரோடு, ரஞ்சித் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கோட்டூர்புரம் முழுவதும், ஸ்ரீநகர் காலனி, சின்னமலை, ஸ்ரீராம் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
டிஎன்பிஎஸ்சி 102 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
-
அம்பத்தூர் பகுதி: ஞானமூர்த்தி நகர், கருக்கு, செங்குன்றம்சாலை, சர்வீஸ் ரோடு, முருகாம்பேடு, பசும்பொன் மெயின் ரோடு.
-
தண்டையார்பேட்டை நாப்பாளையம் பகுதி: மணலி புதுநகர், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழல் நகர், அருள் முருகன் நகர், நாப்பாளையம், பொன்னியம்மன் நகர், எம்.ஆர்.எப் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
-
பெருங்குடி பகுதி: மாநகராட்சி ரோடு பகுதி, சீவாரம் 1,2,3, ஓ.எம் ரோடு பகுதி, வேம்புலியம்மன் கோயில் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி, ராமசந்திரன் தெரு, ஆறுமுகம் அவென்யூ, தேரடி தெரு மற்றம் மேற்காணும் இடங்கள்ல சுற்றியுள்ள பகுதிகள்.