உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு – தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் நிலுவையில் வைக்கப்பட்டிருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு:
தமிழகத்தில் கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது புதிதாக எல்லை பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்தது. உச்சநீதிமன்றம் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறு அரசிற்கு உத்தரவிட்டது.
டிஎன்பிஎஸ்சி 102 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு முடிவுகள் வெளியீடு!!!
இதனால் தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான 27,003 பதவியிடங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 9 மாவட்டங்களில் 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 78 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கும், 755 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கும், 1,577 கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கும், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான 12,252 பதிவிகளுக்கான தேர்தல் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 தேதியான இன்று மற்றும் அக்டோபர் 9ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தது.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 போட்டியாளர் வருண் பற்றி தெரியுமா? சின்னத்திரைக்கு வந்தது ஏன்?
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 171 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 3,777 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட சுமார் 1,10,000 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மேலும், 17,130 காவலர்கள், 3,405 ஊர்க் காவல் படையினர் என மொத்தம் 20,533 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை 7 மணி முதல் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், மாலை 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கபட்டு நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதனால் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வகுப்பு பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.