தமிழக அரசு ஓய்வூதியத்தார்கள் அரசின் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளனர். அது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசுக்கு வேண்டுகோள்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் மார்ச் 30 ஆம் தேதியே உயர்த்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் பழைய, 13வது ஊதிய ஒப்பந்தத்தின்படி, பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் ஓய்வூதியதரர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து துறை செயலருக்கு, அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாநில தலைவர் கதிரேசன் கடிதம் அனுப்பி இருக்கின்றனர். அதில் போக்குவரத்து கழகங்களில் 2016 செப்டம்பர் 1ம் தேதி முதல் 2017 ஆகஸ்ட் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. முன் கூடியே கோடை விடுமுறை – கல்வித்துறை அதிரடி!
இந்த காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும். 13வது ஊதிய ஒப்பந்தப்படி உரிய பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை, விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என அரசாணை வெளியானது. ஆனால் தற்போது வரை வழங்காமல் இருக்கிறது. எனவே அரசு அனைத்து கோட்டங்களிலும் மேற்குறிப்பிட்ட காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு, 13வது ஒப்பந்தப்படி பணிக்கொடை மற்றும் விடுப்பு சம்பளம் கணக்கீடு செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.