தமிழகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்க ஆலோசனை கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
போராட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் அமைக்கப்பட்டு அதன் மூலம் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாத இறுதியிலும் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இது குறித்து CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த 10 ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் ஜனவரி 30 மற்றும் 31ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்திற்கு திட்டமிட்டபடி விரிவான பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிப். 16 ஆம் தேதி முதல்வர் இல்ல முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.