தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் சுமார் ஒரு ஆண்டு காலமாக பள்ளிகள் கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தீவிரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் ஜூன் 3 ஆம் வாரம் முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வகுப்புகள், சூழலுக்கு ஏற்ப நேர்முக அல்லது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் நாளை (ஜூன் 14) முதல் புதிய தளர்வாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நிர்வாக பணிகளுக்காக திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுதி செய்து வருகின்றனர்.
Work From Home பணியாளர்கள் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!!
தற்போது இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கமளித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து, நிலைமை கட்டுக்குள் வந்ததும் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார். எனவே இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்கள பணியாளர்களின் தொல்லை தாங்க முடியவில்லை