தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஜூன் 14 முதல் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ள முழு ஊரடங்கில் பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. இதில் தேநீர் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
கூடுதல் தளர்வுகள்:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள அதிகாரப்பூரவ அறிவிப்பின்படி, 11 மாவட்டங்கள் தவிர்த்து இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஜூன் 14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – ஆசிரியர்கள் போக்குவரத்திற்கு அனுமதி!
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல. இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.