தமிழக சட்ட பல்கலையில் சேர்க்கை நுழைவுத்தேர்வு – அறிவிப்பு வெளியீடு!!
தமிழ்நாடு அம்பேத்கார் சட்ட பல்கலையில் 2021 – 2022ம் கல்வி ஆண்டுக்கான பிஎச்.டி., மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட பல்கலைக்கழகம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பல முக்கிய தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் நேரடி தேர்வுகளை நடத்துவது ஆபத்தானது என்பதால் பல பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் தேர்வு முறைகளை பின்பற்றி வருகிறது.
TN Job “FB Group” Join Now
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலையில் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கான பி.எச்டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பிற்கு மொத்தம் 110 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு ஆன்லைன் முறையில் வரும் ஜூன் 19ம் தேதி அன்று நடக்க இருக்கிறது.
பி.எச்டி., படிப்பிற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.750 செயல்முறை கட்டணமாகவும், மற்றவர்களுக்கு ரூ.1250ம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் சட்ட பல்கலையின், http://tndalu.ac.in/ என்ற இணைய தளத்தில் விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் கையேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.