தமிழக வேலைவாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – பிப்ரவரி 28க்குள் விண்ணப்பிக்கலாம்!!
தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற 5 ஆண்டுகள் விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை வழங்கும் திட்டம்:
தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை பெற 5 ஆண்டுகள் பதிவு செய்து காத்திருப்போருக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு – e-sanad இணையதளம் அறிமுகம்!!
இந்த திட்டத்தின் மூலம் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்றவற்றை பதிவு செய்து 5 ஆண்டுகளாக காத்திருப்போருக்கும் அதனை டிசம்பர் 31 ஆம் தேதி வரை புதுப்பித்து வருவோரும் உதவித்தொகை பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து 1 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைய வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கான “சொல்லின் தாய் விருது” – தமிழக அரசு அறிவிப்பு!!
கொரோனா காரணமாக இதற்கு விண்ணப்பித்தவர்கள் நேரில் வராமல் இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதிகுள் அனுப்ப வேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் பெற திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தினை அணுகலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்