வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு – e-sanad இணையதளம் அறிமுகம்!!
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு வேலை, கல்வி மற்றும் சில தேவைகளுக்காக செல்ல விசா பெறுவதற்கு சான்றிதழ்களில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் முத்திரையிடப்பட வேண்டும் என சில நாடுகள் கோருவதால் குறிப்பிட்ட ஆவணங்களை சரிபார்க்க மத்திய அரசு ‘e-sanad’ என்ற இணைய வழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு ‘e-sanad’ இணையதளம்:
வெளிநாடுகளில் வேலை, கல்வி மற்றும் பல தேவைகளுக்கான செல்ல விருப்பமுள்ள இந்தியர்களுக்கு சில வெளிநாட்டு அரசாங்கம் சார்பில் வெளிநாட்டு தூதரங்கள் விசா பெறுவதற்கு விண்ணப்பித்த இந்தியர்களின் கல்வி சான்றிதழ்கள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை சரிபார்த்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தால், முத்திரையிடப்பட வேண்டும் என கூறப்படுகின்றன.
கல்லூரி மாணவர்களுக்கான “சொல்லின் தாய் விருது” – தமிழக அரசு அறிவிப்பு!!
எனவே இந்த நாடுகளுக்காக இணையவழி மூலமாக சரிபார்த்து முத்திரையிட மத்திய அரசு ‘e-sanad’ இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளம் மூலமாக தமிழக அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கல்வி சான்றிதழ், மற்றும் அரசு வழங்கும் பிறப்பு மற்றும் திருமண சான்றிதழ் போன்றவற்றை சரி பார்த்து முத்திரையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரையில் பிப்ரவரி 5இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு!!
இதன்படி வெளிநாடுகள் செல்ல விரும்புவோர் ”www.esanad.nic.in” என்ற இணையதளம் மூலமாக விபரங்களை பதிவு செய்து தேவையான ஆவணங்களை pdf முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களை சரி பார்த்து இந்திய வெளியுறவு அமைச்சகம் மூலமாக முத்திரையிட்டு அவர்களது முகவரிக்கே இந்த சான்றிதழ் அனுப்பப்படும். இந்த அறிவிப்பை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்