ஜன.,4 முதல் ரூ.2500 பொங்கல் பரிசு விநியோகம் – மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு!!

0
ஜன.,4 முதல் ரூ.2500 பொங்கல் பரிசு விநியோகம் - மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு!!
ஜன.,4 முதல் ரூ.2500 பொங்கல் பரிசு விநியோகம் - மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு!!
ஜன.,4 முதல் ரூ.2500 பொங்கல் பரிசு விநியோகம் – மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு!!

தமிழகத்தில் பொங்கல் திருநாளை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது. இம்முறை ரூ.2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து இருந்தார். தற்போது பொங்கல் பரிசு வழங்குவதற்கு மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பொங்கல் பரிசு:

கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வேலையிழந்து தவித்தனர். இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் பொங்கல் பரிசை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் திட்டமிட்டார். ஏற்கனவே மாநில வருவாய் குறைந்துள்ள நிலையில் பொங்கல் பரிசு வழங்க போதிய நிதி இல்லாத போதிலும், கடன் வாங்கி வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்து இருந்தார்.

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 – எந்த ரேஷன் கடையிலும் பெற முடியுமா??

மேலும் ஜனவரி 4ம் தேதி முதல் ரூ.2500 ரொக்கம் ஐந்து 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதற்கான நிதி மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. லட்சக்கணக்கில் பணம் புழங்கும் என்பதால் ரேஷன் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிட கலந்தாய்வு நாளை தொடக்கம் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

இந்நிலையில் அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக்கணக்கில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான தொகை செலுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!