தமிழக அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – முதல்வரிடம் மனு!

0
தமிழக அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் - முதல்வரிடம் மனு!
தமிழக அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் - முதல்வரிடம் மனு!
தமிழக அரசு பள்ளிகளின் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் – முதல்வரிடம் மனு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கடந்த புதன்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம்:

தமிழக அரசு பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். குறைவான தொகுப்பூதியம் காரணமாக பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் வேறு பணிக்கு சென்றுள்ளனர். சிலர் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது 12,483 பேர் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.

வாடகை வாகன ஓட்டிகளுக்கு உதவித்தொகை – ஜூலை 15 கடைசி நாள்!!

இந்நிலையில் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாக உள்ளது. எனவே பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல தடவை கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது முதல்வர் முக ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் தலைமையில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்!

அதில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் வாழ்வாதாரம் கருதி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தில் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்படாத கலந்தாய்வை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!