தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்!

0
தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் வகுப்புகள்!
தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆன்லைன் வகுப்புகள்!
தமிழக பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் வகுப்புகள்!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் ஜூலை 23 முதல் துவங்க உள்ளன. அம்மாணவர்களுக்கான பாட அட்டவணைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பாட அட்டவணை

கொரோனா பேரலை காரணமாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேல்நிலை, உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற போதிலும், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு போதிய அளவு வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆரம்பப்பள்ளி மாணவர்களும் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்களை கற்றுக்கொள்ளும் வகையில் பாட அட்டவணை தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் PF பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – செப்டம்பர் 1 வரை கால அவகாசம்!

இது தவிர அம்மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மாணவர் கண்காணிப்பு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களை அவர்கள் சரியாக கவனிக்கிறார்களா என்பதை உடனிருந்து கவனித்து, பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் ஒவ்வொரு தேதி வாரியாக கையெழுத்திட்டு, அந்த படிவத்தை அந்தந்த வகுப்பு ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் B.Ed., செய்முறை தேர்வு – ஜூலை 12 முதல் ஆன்லைனில் துவக்கம்!

இது குறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 23 ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்குகின்றது. அந்த வகையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 1 மணிக்கும், 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 5 மணிக்கும், 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே மாலை 5.30, மாலை 6 மணி, மாலை 7 மணிக்கும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இதில் 1 முதல் 4 வரையுள்ள மாணவர்களுக்கு அரை மணி நேரம் மட்டுமே பாடங்கள் நடத்தப்படும்.

வாடகை வாகன ஓட்டிகளுக்கு உதவித்தொகை – ஜூலை 15 கடைசி நாள்!!

மேலும் திங்கள் கிழமை தோறும் தமிழ் பாடங்களும், செவ்வாய் அன்று ஆங்கிலமும், புதன் அன்று கணக்கு வகுப்புகள் நடத்தப்படும். தவிர வியாழக்கிழமைகளில் 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கு சூழ்நிலையியல் பாடங்களும், 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடங்களும் நடத்தப்படும். வெள்ளிக் கிழமைகளில் 1, 2 ஆம் வகுப்புகளுக்கு பேசும் ஓவியம், 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு சமூக அறிவியல் பாடங்களும் ஒளிபரப்பு செய்யப்படும். இந்த கால அட்டவணை செப்டம்பர் மாதம் வரை பொருந்தும்’ என தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!