தமிழக அரசு மருத்துவமனைகளில் காலிப்பணியிடங்கள் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரேடியோலாஜி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எவ்ண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் சுமார் 38 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரேடியோலாஜி துறையில் 700க்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. மேலும் புதிதாக மாவட்ட தலைமை மருத்துவமனைகள் 11, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இவற்றில் கூடுதல் பணியிடம் எதுவும் நிரப்பப்படவில்லை. அதாவது மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த போது 6 ரேடியோ கிராபர், 2 டார்க் ரூம் அசிஸ்டெண்ட், 1 அட்டெண்டர் பணியிடம் இருந்தது.
1-9 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின் கூட, கூடுதல் பணியிடங்களை உருவாகாமல் ஊழியர்களை 24 மணி நேரமும் சுழற்சி செய்ய வைக்கின்றனர். அது மட்டுமில்லாமல் தமிழகத்தில் தாலுகா மருத்துவமனைகள் 19, தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த தரம் உயர்த்தப்பட்டதால் கூடுதல் பணியிடங்களை விட அதிகமான பணியிடங்கள் நிரப்பினால் மட்டுமே ஊழியர் பற்றாக்குறை சரிசெய்ய முடியும் என தி ரேடியோலாஜி அசிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன் சங்கத் தலைவர் ஞானதம்பி தெரிவித்துள்ளார்.