தமிழகத்தில் ரூ.6000 உடன் கூடுதல் நிவாரணம் – அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கூடுதல் நிவாரணம்
தமிழகத்தில் மிக்ஜாம் புயலில் போது சென்னைக்கு அருகே உள்ள எண்ணூர் சி.பி.சி.எல் ஆலையிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக தாழ்வான பகுதிகளில் படிந்தது. வெள்ள நீருடன் கச்சா எண்ணெய் கலந்ததால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதனால் ஏற்பட்ட பாதிப்பில் 5,852 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6000 நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்த மாநிலங்கள் – பட்டியல் விவரங்கள்!
ஆனால் கச்சா எண்ணெய் கசிவால் பாதியாக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக நிவாரணம் வழங்க சென்னை மாநகராட்சி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. எண்ணெய் கசிவுக்கு காரணமான சிபிசிஎல் நிறுவனத்திடம் தொகையைப் பெற்று அதனை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட 5,852 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.