தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாளை (பிப்.15) சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சிறப்பு முகாம்
தமிழகத்தில் ஏழை மாணவர்களின் படிப்பிற்காக கல்விக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் நாளை (பிப்.15) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பணம் இல்லாமல் உயர்கல்வியை தொடர முடியாமல் இருக்கும் மாணவர்கள் இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பிப்.15 ( நாளை) எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா? – முழு விவரம் இதோ!
இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்களின் விவரங்களும் வெளியாகி இருக்கிறது. அதாவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதார், வாக்காளர் அட்டை, பான் கார்டு, சாதி சான்றிதழ், பெற்றோரின் வருமான சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கல்வி சான்று, கல்லூரி கட்டண விவரம், முதல் பட்டதாரி சான்று, வங்கி பாஸ் புக், கல்லூரி சேர்க்கை கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.