தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் – விரைவில் கலந்தாய்வு நடத்த கோரிக்கை!!
தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 ஆம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் காலியாக உள்ள ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
பணிமாறுதல் கலந்தாய்வு:
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த 19 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 3 பிளஸ் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் 7 பள்ளிகள் புதிதாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆசிரியர் காலியிடங்கள் பல உருவாகியுள்ளன. இதன் முக்கிய காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி சமூக இடைவெளி பின்பற்ற ஒரு வகுப்பிற்கு 25 மாணவர்கள் மட்டுமே அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேவை.
தமிழகத்தில் 9,11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க 98% பெற்றோர்கள் அனுமதி – அமைச்சர் தகவல்!!
இதன் காரணமாக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் விரைவில் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். கடந்த மே மாதத்திற்கு பின், பணி ஓய்வு பெறுவோருக்கு மட்டுமே, ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதற்கு பின்னர் ஓய்வு பெறுவோருக்கான காலியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எனவே விரைவில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், ஊதிய உயர்வு போன்றவை அளிக்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்