தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு – ஐகோர்ட் புதிய உத்தரவு!!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு - ஐகோர்ட் புதிய உத்தரவு!!
தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு - ஐகோர்ட் புதிய உத்தரவு!!
தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு – ஐகோர்ட் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி தேர்வுகள் மூலமாக நேரடி நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெற இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை செல்லாது என உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு 4 வாரம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி குறித்த வழக்கு:

தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையிலான 69% சதவிகித இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி தேர்வுகள் மூலமாக நேரடி நியமனம் பெற்றவர்களுக்கு இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை மூலமாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎன்பிஎஸ்சி.,யில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் வரிசையின் முன்னிலை வகித்தும் பதவி உயர்வு பெறாத அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழ்நாடு சார்நிலை பணி அறிவிப்பின்படி மதிப்பெண் ரேங்க் அடிபடையில் முன்னிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர். இதை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பட்டியல் வெளியீடு – பிப்ரவரி 19 சான்றிதழ் சரிபார்ப்பு!!

இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு புதிதாக கொண்டுவரபட்ட தமிழ்நாடு பணியாளர் சட்டத்தின் படி, அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வில் இனசுழற்சி மற்றும் உள்ஒதுக்கீடு முறை அமல்படுத்தலாம் என மாற்றம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் “பதவி உயர்வுக்கான முதுகலை பட்டியல் தயார் செய்ய அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிவரன்முறை – அரசுக்கு கோரிக்கை!!

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை என அரசு ஊழியர்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணையில் டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி மூலமாக நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் பதவி உயர்வுக்கான முதுகலை பட்டியல் தயார் செய்ய மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் எனவும், இதனை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும்” என கெடு விதித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!