தமிழக அரசுப்பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்:
2012 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின் படி 16,500 பகுதி நேர ஆசிரியர்கள் தொகுப்பூதியம் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். குறைவான தொகுப்பூதியம் காரணமாக பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பணி மாறுதல் மற்றும் 500க்கு மேற்பட்டோர் இறந்தும், சிலர் ஓய்வு பெற்றும் உள்ளனர். எனவே தற்போது 12,483 பேர் மட்டுமே பணி செய்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பாட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி பல முறை முதல்வரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் சார்பில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு 30% ஊதிய உயர்வாக ரூ.2500 மட்டுமே உயர்த்தி ரூ.10,000 தொகுப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 24 கடைசி நாள்!!
இந்நிலையில் வழக்கம் போல் 4 வேலை நாட்களில், 3 நாட்கள் முழு வேலை நாட்களாகவும், 1 நாள் பகுதி நேர வேலைநாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. இந்த அறிவிப்பு காரணமாக அவர்களுக்கு பணி நிரந்தரம் தடைபெறுகிறது. இதனை கருத்தில் கொண்டு வெளியிட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்து இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பணிநிரந்தர அறிவிப்பை வெளியிட வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்