ஆதிதிராவிடர் நலத்துறை விடுதி மாணவர் சேர்க்கை – பிப்ரவரி 24 கடைசி நாள்!!
வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அனுப்ப பிப்ரவரி 24 கடைசி தேதி என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள்:
வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பின் படி, “வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு விடுதிகளில் தங்கி படிக்க மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் விடுதிகளில் சேர்ந்து படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி கையேடு வழங்கப்படுகிறது. இந்த விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் அனைத்து விடுதிகளிலும் இலங்கை தமிழர்களுக்கு தனியே 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதித் தேர்வு & தமிழ்வழி ஒதுக்கீடு – முக்கிய அறிவிப்பு!!
இந்த விடுதிகளில் தங்கி படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் பணிபுரியும் விடுதி காப்பாளர், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்