தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் இன்று (பிப்.15) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கடையடைப்பு போராட்டம்
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை பயன்படுத்த தடை விதித்தது.
உங்கள் ஏரியாவில் நாளை (16.02.2024) மின்தடையா? – செக் பண்ணிக்கோங்க!
இந்நிலையில் இந்த உத்தரவை தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதே போல உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் அந்த வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்ட வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துகின்றனர். அடுத்த மாதம் 10 ஆயிரம் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.அதனால் அந்த பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்தில் இருக்கின்றனர்.