தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு – நிம்மதியில் விவசாயிகள்!

0
தமிழகத்தில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - நிம்மதியில் விவசாயிகள்!

தமிழகத்தில் கடந்த வாரம் பூக்களின் விலை குறைந்த நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 21) விலை உயர்ந்துள்ளது.

பூக்களின் விலை

தமிழகத்தில் பூக்களின் விலை கடந்த வாரம் மூகூர்த்த நாள் இல்லாததால் குறைந்தது. ஆனால் நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விலை நேற்று (ஏப்ரல் 21) அதிகரித்துள்ளது. பொதுவாக சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான பூக்கள் விற்பனைக்கு வருகிறது.

கடன் வாங்க போறீங்களா? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க – இப்படி எல்லாம் சிக்கல் வரும்!

அதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாளை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு கிலோ மல்லி ரூ.450க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.350க்கும், சாமந்தி மற்றும் அரளிப்பூ ஆகியவை ரூ.250க்கும், சம்பங்கி ரூ.400க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல கனகாம்பரம் பூ ரூ.1200க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் நிம்மதியில் இருக்கின்றனர்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!